أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا الأَشْعَثُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى صَلاَةَ الْخَوْفِ بِالَّذِينَ خَلْفَهُ رَكْعَتَيْنِ وَالَّذِينَ جَاءُوا بَعْدُ رَكْعَتَيْنِ فَكَانَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَرْبَعَ رَكَعَاتٍ وَلِهَؤُلاَءِ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ .
அபூ பக்ரா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: நபி (ஸல்) அவர்கள் பயங்காலத் தொழுகையைத் தொழுவித்தார்கள். (அதாவது,) தங்களுக்குப் பின்னால் இருந்த (முதல்) குழுவினருடன் இரண்டு ரக்அத்களும், (பிறகு) தங்களுக்குப் பிறகு வந்த (இரண்டாவது) குழுவினருடன் இரண்டு ரக்அத்களும் தொழுவித்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு ரக்அத்கள் ஆயின, மேலும் (அந்த) ஒவ்வொரு குழுவினருக்கும் இரண்டு ரக்அத்கள் ஆயின.