நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் பயணம் செய்தோம். அப்போது மக்களில் சிலர், "அல்லாஹ்வின் தூதரே! (இரவின் இறுதியில்) எங்களுடன் தாங்கள் ஓய்வெடுத்தால் (நன்றாக இருக்குமே!)" என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் உறங்கித் தொழுகையைத் தவறவிட்டு விடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன்" என்றார்கள். பிலால் (ரழி), "நான் உங்களை எழுப்பி விடுகிறேன்" என்றார்.
ஆகவே அவர்கள் படுத்து(றங்கி)னார்கள். பிலால் (ரழி) தமது வாகனத்தின் மீது முதுகைச் சாய்த்துக் கொண்டார். ஆயினும் அவரைத் தூக்கம் மிகைக்கவே அவரும் உறங்கிவிட்டார். சூரியனின் விளிம்பு உதயமானபோது நபி (ஸல்) அவர்கள் விழித்தார்கள். "பிலாலே! எங்கே உமது சொல்?" என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (ரழி), "இது போன்ற ஒரு உறக்கம் என்மீது ஒருபோதும் இடப்பட்டதில்லை" என்று கூறினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியபோது உங்கள் உயிர்களைக் கைப்பற்றினான்; மேலும் தான் நாடியபோது அவற்றை உங்களிடம் திருப்பியனுப்பினான். பிலாலே! எழுந்து மக்களுக்காகத் தொழுகைக்கு பாங்கு சொல்வீராக!" என்றார்கள். பிறகு (நபி (ஸல்) அவர்கள்) உளூ செய்தார்கள். சூரியன் (நன்கு) உயர்ந்து பிரகாசமானபோது, அவர்கள் எழுந்து தொழுதார்கள்.