உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்:
"எவர் தொழுகைக்காக உளூ செய்து, அதை முழுமையாகச் செய்து, பின்னர் கடமையான தொழுகையை (நிறைவேற்ற) நடந்து சென்று, மக்களுடன் சேர்ந்தோ அல்லது ஜமாஅத்துடனோ அல்லது பள்ளிவாசலிலோ அதை நிறைவேற்றினாரோ, அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்துவிடுவான்."