حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْجُمُعَةِ فِي صَلاَةِ الْفَجْرِ {الم * تَنْزِيلُ} السَّجْدَةَ وَ{هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ}
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
வெள்ளிக்கிழமைகளில் நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தாவை (முதல் ரக்அத்தில்) மற்றும் ஹல் அத்தா அலல் இன்ஸான் அதாவது சூரத்துத் தஹ்ரை (இரண்டாவது ரக்அத்தில்) ஓதுவார்கள்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் "அலிஃப், லாம், மீம், தன்ஸீல்" மற்றும் "ஹல் அத்தா" ஓதுபவர்களாக இருந்தார்கள்.
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَقْرَأُ فِي صَلاَةِ الْفَجْرِ يَوْمَ الْجُمُعَةِ {الم * تَنْزِيلُ} وَ {هَلْ أَتَى عَلَى الإِنْسَانِ}
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: வெள்ளிக்கிழமைகளில் ஸுப்ஹு தொழுகையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அலிஃப், லாம், மீம். இவ்வேதம் அருளப்பட்டது…’ (32:1) மற்றும் ‘மனிதன் மீது ஒரு காலம் வரவில்லையா…’ (76:1) ஆகியவற்றை ஓதுபவர்களாக இருந்தார்கள்.