அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நிச்சயமாக லுஹர் தொழுகைக்கு இக்காமத் சொல்லப்பட்டால், (அப்போது) ஒருவர் அல்-பகீஃக்குச் சென்று, தமது தேவையை நிறைவேற்றிய பின்னர், உளூச் செய்துவிட்டுத் திரும்பி வருவார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்திலேயே இருப்பார்கள். (ஏனெனில்) அவர்கள் அதனை (அவ்வளவு) நீட்டுவார்கள்."