حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ جَسْرَةَ بِنْتِ دَجَاجَةَ، قَالَتْ سَمِعْتُ أَبَا ذَرٍّ، يَقُولُ قَامَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِآيَةٍ حَتَّى أَصْبَحَ يُرَدِّدُهَا وَالآيَةُ {إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ} .
அபூ தர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகையில்) காலை விடியும் வரை நின்று ஒரு வசனத்தை ஓதி, அதையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். (அந்த வசனம் அல்குர்ஆன் அத்தியாயம் 5, ஸூரத்துல் மாஇதா, வசனம் 118 ஆகும்.) அந்த வசனம்:
(இதன் பொருள்): ‘நீ அவர்களைத் தண்டித்தால், அவர்கள் உன்னுடைய அடியார்களே. நீ அவர்களை மன்னித்துவிட்டால், நிச்சயமாக நீ, நீயே யாவரையும் மிகைத்தவன்; மகா ஞானமுள்ளவன்.’”