இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1350சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ أَبُو بِشْرٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ قُدَامَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ جَسْرَةَ بِنْتِ دَجَاجَةَ، قَالَتْ سَمِعْتُ أَبَا ذَرٍّ، يَقُولُ قَامَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِآيَةٍ حَتَّى أَصْبَحَ يُرَدِّدُهَا وَالآيَةُ ‏{إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ}‏ ‏.‏
ஜஸ்ரா பின்த் திஜாஜா அவர்கள் கூறினார்கள்:
“அபூ தர் (ரழி) அவர்கள் கூற நான் கேட்டேன்: ‘நபி (ஸல்) அவர்கள் காலை விடியும் வரை நின்று ஒரு வசனத்தை ஓதி, அதையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். அந்த வசனம்: “நீ அவர்களைத் தண்டித்தால், அவர்கள் உன்னுடைய அடிமைகளே. நீ அவர்களை மன்னித்துவிட்டால், நிச்சயமாக நீ, நீயே யாவரையும் மிகைத்தவன், மகா ஞானமுள்ளவன்.’”” 5:118

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)