அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ மூஸா (ரழி) அவர்களின் ஓதுதலைக் கேட்டுவிட்டு, "நிச்சயமாக, தாவூத் (அலை) அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட மஸாமீர்களில் (அழகிய குரல்களில்) ஒரு மிஸ்மார் (அழகிய குரல்) இவருக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் அபூ மூஸா (அல்-அஷ்அரீ) அவர்களின் (குர்ஆன்) ஓதலைக் கேட்டார்கள். அப்போது, "நிச்சயமாக இவருக்கு, தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட (அழகிய) குரல் வளங்களில் (மஸாமீர்) ஒன்று வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள்.