ஸைத் பின் அர்கம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தேவையைத் தம் தோழரிடம் கூறுவார். இறுதியில், {ஹாஃபிழூ அலஸ் ஸலவாத்} (தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்) எனும் வசனம் அருளப்பட்டது. அதன்பிறகு நாங்கள் (தொழுகையில்) மௌனமாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டோம்.
ஸைத் இப்னு அர்கம் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். ஒருவர் தொழுகையில் தனக்குப் பக்கத்திலுள்ள தனது தோழருடன் பேசிக்கொண்டிருப்பார். 'வ கூமூ லில்லாஹி கானிதீன்' (அல்லாஹ்வின் சமூகத்தில் பணிவுடன் நில்லுங்கள்) என்ற வசனம் அருளப்படும் வரை (இந்நிலை இருந்தது). பின்னர் நாங்கள் மௌனமாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டோம்; பேசுவதிலிருந்து தடுக்கப்பட்டோம்."
ஜைத் இப்னு அர்கம் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையின் போது எங்களில் ஒருவர் அவருக்கு அருகில் இருக்கும் நபரிடம் பேசிக்கொண்டிருப்பார். அப்போது, **'வ கூமூ லில்லாஹி கானிதீன்'** (அல்லாஹ்வுக்குப் பணிவுடனும், அமைதியுடனும் நில்லுங்கள்) எனும் குர்ஆன் வசனம் இறங்கியது. எனவே, நாங்கள் அமைதியாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டோம்; பேசுவதற்குத் தடை விதிக்கப்பட்டோம்.