இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7487ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ، عَنِ الْمَعْرُورِ، قَالَ سَمِعْتُ أَبَا ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ أَتَانِي جِبْرِيلُ فَبَشَّرَنِي أَنَّهُ مَنْ مَاتَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ ‏"‏‏.‏ قُلْتُ وَإِنْ سَرَقَ وَإِنْ زَنَى قَالَ ‏"‏ وَإِنْ سَرَقَ وَإِنْ زَنَى ‏"‏‏.‏
அபூ தர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(வானவர்) ஜிப்ரீல் என்னிடம் வந்து, 'அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காமல் இறக்கின்ற எவரும் (உமது சமுதாயத்தில்) சொர்க்கத்தில் நுழைவார்' என்று எனக்கு நற்செய்தி கூறினார்."

நான், "அவர் திருடினாலும், விபச்சாரம் செய்தாலுமா?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(ஆம்), அவர் திருடினாலும், விபச்சாரம் செய்தாலும் சரியே!" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
94 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ وَاصِلٍ الأَحْدَبِ، عَنِ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ، قَالَ سَمِعْتُ أَبَا ذَرٍّ، يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏"‏ أَتَانِي جِبْرِيلُ - عَلَيْهِ السَّلاَمُ - فَبَشَّرَنِي أَنَّهُ مَنْ مَاتَ مِنْ أُمَّتِكَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ ‏"‏ ‏.‏ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ ‏.‏ قَالَ ‏"‏ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ ‏"‏ ‏.‏
அபூ தர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்து, 'உம்முடைய சமுதாயத்தில் எவர் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ, அவர் சொர்க்கத்தில் நுழைவார்' என்று எனக்கு நற்செய்தி கூறினார்." நான், "(அவர்) விபச்சாரம் புரிந்திருந்தாலும், திருடியிருந்தாலுமா?" என்று கேட்டேன். அதற்கு (நபி ஸல் அவர்கள்), "(ஆம்,) அவர் விபச்சாரம் புரிந்திருந்தாலும், திருடியிருந்தாலும் (அவர் சொர்க்கம் நுழைவார்)" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح