பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம், "உங்களி(டம் நன்மையை அடைவதி)ல் ஆண்கள் எங்களை முந்திவிட்டனர். எனவே, தாங்கள் எங்களுக்காகத் தங்களிடமிருந்து ஒரு நாளை ஏற்படுத்துங்கள்" என்று கூறினர். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு உபதேசம் செய்து (மார்க்கக்) கட்டளைகளைப் பிறப்பித்தார்கள். அப்போது அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியவற்றில் இதுவும் ஒன்றாகும்: "உங்களில் எந்தப் பெண்ணாவது தன் குழந்தைகளில் மூன்று பேரை (தனக்கு முன்னால்) இறக்கக் கொடுத்துவிட்டால், அக்குழந்தைகள் அவளுக்கு நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்." அப்போது ஒரு பெண்மணி, "இரண்டு பேரை (இறக்கக் கொடுத்தால்)?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இரண்டு பேர் (இறந்தாலும் சரியே)" என்று கூறினார்கள்.