இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சூரிய) கிரகணம் ஏற்பட்டபோது தொழுதார்கள். அவர்கள் (கியாமில் குர்ஆனை) ஓதினார்கள், பின்னர் குனிந்தார்கள். அவர்கள் மீண்டும் ஓதினார்கள், மீண்டும் குனிந்தார்கள். அவர்கள் மீண்டும் ஓதினார்கள், மீண்டும் குனிந்தார்கள், மீண்டும் ஓதினார்கள், மீண்டும் குனிந்தார்கள், பின்னர் ஸஜ்தாச் செய்தார்கள்; மேலும் இரண்டாவது (ரக்அத்) இதுபோலவே இருந்தது.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது தொழுதார்கள்; அவர்கள் குர்ஆனிலிருந்து ஓதிவிட்டுப் பிறகு ருகூ செய்தார்கள்; பின்னர் குர்ஆனிலிருந்து ஓதிவிட்டுப் பிறகு ருகூ செய்தார்கள்; பின்னர் குர்ஆனிலிருந்து ஓதிவிட்டு ருகூ செய்தார்கள்; பின்னர் குர்ஆனிலிருந்து ஓதிவிட்டு ருகூ செய்தார்கள். பின்னர் அவர்கள் ஸஜ்தா செய்துவிட்டு, முதலாவதைப் போன்றே இரண்டாவது ரக்அத்தையும் நிறைவேற்றினார்கள்.