அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படுகிறது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பது உங்களுக்குத் தெரியாதா?" அவன் (அல்லாஹ்) கூறினான்: "நான் எனது அடியார்களுக்கு ஒரு அருட்கொடையை வழங்கியபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அதனை நிராகரித்து (அல்லது அதற்கு நன்றிகெட்டவர்களாக மாறி), 'நட்சத்திரங்கள்தான் (இதற்குக் காரணம்), நட்சத்திரங்களால்தான் (இது நிகழ்ந்தது)' என்று கூறினார்கள்."