இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5795ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَبْدَ اللَّهِ بْنَ أُبَىٍّ بَعْدَ مَا أُدْخِلَ قَبْرَهُ، فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ، وَوُضِعَ عَلَى رُكْبَتَيْهِ، وَنَفَثَ عَلَيْهِ مِنْ رِيقِهِ، وَأَلْبَسَهُ قَمِيصَهُ، وَاللَّهُ أَعْلَمُ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உபை அவனது கப்ரில் வைக்கப்பட்ட பிறகு அவனிடம் வந்தார்கள். அவனை (வெளியே) எடுக்குமாறு கட்டளையிட்டார்கள். அவன் வெளியே எடுக்கப்பட்டு, நபி (ஸல்) அவர்களின் முழங்கால்கள் மீது வைக்கப்பட்டான். அவர்கள் தம் உமிழ்நீரை அவன் மீது உமிழ்ந்தார்கள்; மேலும் தம்முடைய சட்டையை அவனுக்கு அணிவித்தார்கள். அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح