இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

746 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ، أَنَّ سَعْدَ بْنَ هِشَامِ بْنِ عَامِرٍ، أَرَادَ أَنْ يَغْزُوَ، فِي سَبِيلِ اللَّهِ فَقَدِمَ الْمَدِينَةَ فَأَرَادَ أَنْ يَبِيعَ عَقَارًا لَهُ بِهَا فَيَجْعَلَهُ فِي السِّلاَحِ وَالْكُرَاعِ وَيُجَاهِدَ الرُّومَ حَتَّى يَمُوتَ فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ لَقِيَ أُنَاسًا مِنْ أَهْلِ الْمَدِينَةِ فَنَهَوْهُ عَنْ ذَلِكَ وَأَخْبَرُوهُ أَنَّ رَهْطًا سِتَّةً أَرَادُوا ذَلِكَ فِي حَيَاةِ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم فَنَهَاهُمْ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ ‏ ‏ أَلَيْسَ لَكُمْ فِيَّ أُسْوَةٌ ‏ ‏ ‏.‏ فَلَمَّا حَدَّثُوهُ بِذَلِكَ رَاجَعَ امْرَأَتَهُ وَقَدْ كَانَ طَلَّقَهَا وَأَشْهَدَ عَلَى رَجْعَتِهَا فَأَتَى ابْنَ عَبَّاسٍ فَسَأَلَهُ عَنْ وِتْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ابْنُ عَبَّاسٍ أَلاَ أَدُلُّكَ عَلَى أَعْلَمِ أَهْلِ الأَرْضِ بِوِتْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ قَالَ عَائِشَةُ ‏.‏ فَأْتِهَا فَاسْأَلْهَا ثُمَّ ائْتِنِي فَأَخْبِرْنِي بِرَدِّهَا عَلَيْكَ فَانْطَلَقْتُ إِلَيْهَا فَأَتَيْتُ عَلَى حَكِيمِ بْنِ أَفْلَحَ فَاسْتَلْحَقْتُهُ إِلَيْهَا فَقَالَ مَا أَنَا بِقَارِبِهَا لأَنِّي نَهَيْتُهَا أَنْ تَقُولَ فِي هَاتَيْنِ الشِّيعَتَيْنِ شَيْئًا فَأَبَتْ فِيهِمَا إِلاَّ مُضِيًّا ‏.‏ - قَالَ - فَأَقْسَمْتُ عَلَيْهِ فَجَاءَ فَانْطَلَقْنَا إِلَى عَائِشَةَ فَاسْتَأْذَنَّا عَلَيْهَا فَأَذِنَتْ لَنَا فَدَخَلْنَا عَلَيْهَا ‏.‏ فَقَالَتْ أَحَكِيمٌ فَعَرَفَتْهُ ‏.‏ فَقَالَ نَعَمْ ‏.‏ فَقَالَتْ مَنْ مَعَكَ قَالَ سَعْدُ بْنُ هِشَامٍ ‏.‏ قَالَتْ مَنْ هِشَامٌ قَالَ ابْنُ عَامِرٍ فَتَرَحَّمَتْ عَلَيْهِ وَقَالَتْ خَيْرًا - قَالَ قَتَادَةُ وَكَانَ أُصِيبَ يَوْمَ أُحُدٍ ‏.‏ فَقُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ أَنْبِئِينِي عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَتْ أَلَسْتَ تَقْرَأُ الْقُرْآنَ قُلْتُ بَلَى ‏.‏ قَالَتْ فَإِنَّ خُلُقَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ الْقُرْآنَ ‏.‏ - قَالَ - فَهَمَمْتُ أَنْ أَقُومَ وَلاَ أَسْأَلَ أَحَدًا عَنْ شَىْءٍ حَتَّى أَمُوتَ ثُمَّ بَدَا لِي فَقُلْتُ أَنْبِئِينِي عَنْ قِيَامِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَتْ أَلَسْتَ تَقْرَأُ ‏{‏ يَا أَيُّهَا الْمُزَّمِّلُ‏}‏ قُلْتُ بَلَى ‏.‏ قَالَتْ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ افْتَرَضَ قِيَامَ اللَّيْلِ فِي أَوَّلِ هَذِهِ السُّورَةِ فَقَامَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ حَوْلاً وَأَمْسَكَ اللَّهُ خَاتِمَتَهَا اثْنَىْ عَشَرَ شَهْرًا فِي السَّمَاءِ حَتَّى أَنْزَلَ اللَّهُ فِي آخِرِ هَذِهِ السُّورَةِ التَّخْفِيفَ فَصَارَ قِيَامُ اللَّيْلِ تَطَوُّعًا بَعْدَ فَرِيضَةٍ ‏.‏ - قَالَ - قُلْتُ يَا أُمَّ الْمُؤْمِنِينَ أَنْبِئِينِي عَنْ وِتْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَقَالَتْ كُنَّا نُعِدُّ لَهُ سِوَاكَهُ وَطَهُورَهُ فَيَبْعَثُهُ اللَّهُ مَا شَاءَ أَنْ يَبْعَثَهُ مِنَ اللَّيْلِ فَيَتَسَوَّكُ وَيَتَوَضَّأُ وَيُصَلِّي تِسْعَ رَكَعَاتٍ لاَ يَجْلِسُ فِيهَا إِلاَّ فِي الثَّامِنَةِ فَيَذْكُرُ اللَّهَ وَيَحْمَدُهُ وَيَدْعُوهُ ثُمَّ يَنْهَضُ وَلاَ يُسَلِّمُ ثُمَّ يَقُومُ فَيُصَلِّي التَّاسِعَةَ ثُمَّ يَقْعُدُ فَيَذْكُرُ اللَّهَ وَيَحْمَدُهُ وَيَدْعُوهُ ثُمَّ يُسَلِّمُ تَسْلِيمًا يُسْمِعُنَا ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ مَا يُسَلِّمُ وَهُوَ قَاعِدٌ فَتِلْكَ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يَا بُنَىَّ فَلَمَّا أَسَنَّ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم وَأَخَذَ اللَّحْمَ أَوْتَرَ بِسَبْعٍ وَصَنَعَ فِي الرَّكْعَتَيْنِ مِثْلَ صَنِيعِهِ الأَوَّلِ فَتِلْكَ تِسْعٌ يَا بُنَىَّ وَكَانَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا صَلَّى صَلاَةً أَحَبَّ أَنْ يُدَاوِمَ عَلَيْهَا وَكَانَ إِذَا غَلَبَهُ نَوْمٌ أَوْ وَجَعٌ عَنْ قِيَامِ اللَّيْلِ صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً وَلاَ أَعْلَمُ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم قَرَأَ الْقُرْآنَ كُلَّهُ فِي لَيْلَةٍ وَلاَ صَلَّى لَيْلَةً إِلَى الصُّبْحِ وَلاَ صَامَ شَهْرًا كَامِلاً غَيْرَ رَمَضَانَ ‏.‏ - قَالَ - فَانْطَلَقْتُ إِلَى ابْنِ عَبَّاسِ فَحَدَّثْتُهُ بِحَدِيثِهَا فَقَالَ صَدَقَتْ لَوْ كُنْتُ أَقْرَبُهَا أَوْ أَدْخُلُ عَلَيْهَا لأَتَيْتُهَا حَتَّى تُشَافِهَنِي بِهِ ‏.‏ - قَالَ - قُلْتُ لَوْ عَلِمْتُ أَنَّكَ لاَ تَدْخُلُ عَلَيْهَا مَا حَدَّثْتُكَ حَدِيثَهَا ‏.‏
ஸஃத் பின் ஹிஷாம் பின் ஆமிர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஸஃத் பின் ஹிஷாம் அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் (ஜிஹாத்) புரிய நாடினார்கள். எனவே மதீனாவிற்கு வந்தார்கள். அங்குள்ள தமக்குச் சொந்தமான நிலபுலன்களை விற்று, அதில் கிடைக்கும் தொகையைக் கொண்டு ஆயுதங்களையும் குதிரைகளையும் வாங்கி, மரணம் சம்பவிக்கும் வரை ரோமர்களுடன் போரிட விரும்பினார்கள்.

அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது மதீனாவாசிகளில் சிலரைச் சந்தித்தார்கள். அம்மக்கள் இவரை அச்செயலிலிருந்து தடுத்தார்கள். மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆறு பேர் கொண்ட ஒரு குழுவினர் இவ்வாறு செய்ய நாடினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களைத் தடுத்து, 'உங்களுக்கு என்னிடம் ஓர் அழகிய முன்மாதிரி இல்லையா?' என்று கேட்டார்கள்" என்ற செய்தியை இவருக்குத் தெரிவித்தனர்.

அவர்கள் இதை இவரிடம் கூறியதும், இவர் (ஊர்) திரும்பினார். தமது மனைவியை இவர் (ஏற்கனவே) விவாகரத்துச் செய்திருந்தார். (இப்போது) அவளுடன் மீண்டும் சேர்ந்து கொண்டதற்குச் சிலரை சாட்சிகளாக்கினார்.

பிறகு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ரு தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி), "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ரு தொழுகையைப் பற்றி பூமியில் உள்ளவர்களிலேயே நன்கறிந்த ஒருவரை உமக்கு நான் அறிவிக்கட்டுமா?" என்று கேட்டார்கள். இவர், "யார் அவர்?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "ஆயிஷா (ரழி)" என்று கூறினார்கள். "நீரே அவர்களிடம் சென்று கேளும்! பிறகு என்னிடம் வந்து, அவர்கள் உமக்கு அளிக்கும் பதிலை எனக்குத் தெரிவியும்" என்று கூறினார்கள்.

எனவே, நான் ஹகீம் பின் அஃப்லஹ் அவர்களிடம் சென்று, "என்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள்" என்று வேண்டினேன். அதற்கு அவர், "நான் அவர்களிடம் செல்லமாட்டேன். ஏனெனில், அந்த இரண்டு கூட்டத்தினரைப் பற்றி (அதாவது அரசியல் குழப்பங்கள் பற்றி) எதுவும் பேச வேண்டாமென நான் அவர்களைத் தடுத்தேன். ஆனால், அவர்கள் (என் பேச்சைக் கேட்காமல்) அப்பேச்சிலேயே தொடர்ந்து ஈடுபட்டார்கள்" என்று கூறினார்.

அப்போது நான், "என்னை அழைத்துச் செல்லும்படி தங்கள் மீது சத்தியம் செய்கிறேன்" என்று (வற்புறுத்திக்) கூறினேன். எனவே அவர் புறப்பட்டார்; நானும் அவருடன் ஆயிஷா (ரழி) அவர்களிடம் சென்றோம். அவர்களிடம் செல்ல அனுமதி கோரினோம். அவர்கள் அனுமதியளித்ததும் உள்ளே நுழைந்தோம்.

அவர்கள் (ஹகீமைப் பார்த்து), "ஹகீமா?" என்று கேட்டார்கள். (அவர் யாரென அறிந்து கொண்டார்கள்). அவர், "ஆம்" என்றார். "உங்களுடன் இருப்பவர் யார்?" என்று அவர்கள் கேட்டார்கள். அவர், "ஸஃத் பின் ஹிஷாம்" என்றார். "எந்த ஹிஷாம்?" என்று அவர்கள் கேட்டார்கள். "ஆமிர் அவர்களின் மகன்" என்று அவர் பதிலளித்தார். உடனே அவர்கள், அவருக்காக (ஆமருக்காக) அல்லாஹ்வின் அருளை வேண்டினார்கள்; அவரைப் பற்றி நல்ல விதமாகக் கூறினார்கள். (கதாதா (ரஹ்) கூறுகிறார்கள்: அவர் உஹதுப் போரில் ஷஹீதாக்கப்பட்டார்).

நான், "முஃமின்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணநலன்கள் பற்றிக் கூறுங்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நீர் குர்ஆனை ஓதுவதில்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (ஓதுகிறேன்)" என்றேன். "நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணநலன்கள் குர்ஆனாகவே இருந்தன" என்று கூறினார்கள்.

நான் (மேலும் எதுவும் கேட்காமல்) எழுந்து விடலாமா என்றும், மரணிக்கும் வரை வேறெவரிடமும் எதையும் கேட்கத் தேவையில்லை என்றும் எண்ணினேன். பிறகு எனக்கு வேறொரு எண்ணம் தோன்றவே, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை (கியாமுல் லைல்) பற்றிக் கூறுங்கள்" என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், "நீர் 'யா அய்யுஹல் முஸ்ஸம்மில்' என்று தொடங்கும் அத்தியாயத்தை ஓதுவதில்லையா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன்.

அவர்கள் கூறினார்கள்: "கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ், இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இரவுத் தொழுகையைக் கடமையாக்கினான். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் ஓராண்டு காலம் அதைத் தொழுது வந்தார்கள். அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் இறுதிப் பகுதியை பன்னிரண்டு மாதங்கள் வானத்தில் நிறுத்தி வைத்தான். (ஓராண்டுக்குப்) பிறகு இந்த அத்தியாயத்தின் இறுதியில் (சலுகை அளிக்கும் வசனத்தை) அல்லாஹ் இறக்கி வைத்தான். எனவே, இரவுத் தொழுகையானது, கடமையானதாக இருந்த நிலை மாறி, உபரியான (நஃபிலான) வழிபாடாக ஆகியது."

நான், "முஃமின்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ரு தொழுகையைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்: "நாங்கள் அவர்களுக்காக பல் துலக்கும் குச்சியையும் (மிஸ்வாக்) உளூச் செய்ய தண்ணீரையும் தயார் செய்து வைப்போம். அல்லாஹ் இரவில் தான் நாடிய நேரத்தில் அவர்களை எழுப்புவான். அவர்கள் பல் துலக்குவார்கள்; உளூச் செய்வார்கள். பிறகு ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். எட்டாவது ரக்அத்தைத் தவிர (இடையில்) வேறெதிலும் உட்காரமாட்டார்கள். (எட்டாவது ரக்அத்தில் உட்கார்ந்து) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, அவனைப் புகழ்ந்து, அவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். பிறகு ஸலாம் கொடுக்காமல் எழுந்து, ஒன்பதாவது ரக்அத்தைத் தொழுவார்கள். பிறகு (அத்தஹிய்யாத் இருப்பில்) உட்கார்ந்து, அல்லாஹ்வை நினைவு கூர்ந்து, அவனைப் புகழ்ந்து, அவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். பிறகு நாங்கள் கேட்கும் அளவுக்கு சப்தமாக ஸலாம் கொடுப்பார்கள். பிறகு ஸலாம் கொடுத்த பின், உட்கார்ந்த நிலையிலேயே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். என் அருமை மகனே! இது (மொத்தம்) பதினோரு ரக்அத்கள் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வயதாகி, உடல் சற்றே பருத்தபோது, ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். (அதன் பின்) இரண்டு ரக்அத்களைத் தங்களின் முன்னைய வழக்கப்படியே (உட்கார்ந்து) தொழுதார்கள். என் அருமை மகனே! இது (மொத்தம்) ஒன்பது ரக்அத்கள் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால், அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்புவார்கள். தூக்கமோ அல்லது வலியோ அவர்களை இரவுத் தொழுகையிலிருந்து மிகைத்துவிட்டால், (அதைத் தவற விட்டதற்காக) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே இரவில் முழு குர்ஆனையும் ஓதியதாகவோ, அல்லது விடியும் வரை இரவு முழுவதும் விழித்திருந்து தொழுததாகவோ, அல்லது ரமலான் மாதத்தைத் தவிர வேறு எந்த மாதமும் முழுமையாக நோன்பு நோற்றதாகவோ நான் அறியவில்லை."

(ஸஃத் கூறுகிறார்): பிறகு நான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் சென்று, ஆயிஷா (ரழி) அவர்கள் கூறிய செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், "அவர்கள் (ஆயிஷா) உண்மையையே கூறியுள்ளார்கள். நான் அவர்களிடம் செல்வேனாயின், நானே அவர்களிடம் சென்று இதை என் காதுகளால் கேட்டிருப்பேன்" என்று கூறினார்கள்.

அப்போது நான் (இப்னு அப்பாஸிடம்), "நீங்கள் அவர்களிடம் செல்வதில்லை என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால், அவர்கள் கூறிய இந்த ஹதீஸை உமக்கு அறிவித்திருக்க மாட்டேன்" என்று கூறினேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1721சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، أَنَّ سَعْدَ بْنَ هِشَامِ بْنِ عَامِرٍ، لَمَّا أَنْ قَدِمَ، عَلَيْنَا أَخْبَرَنَا أَنَّهُ، أَتَى ابْنَ عَبَّاسٍ فَسَأَلَهُ عَنْ وَتْرِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَلاَ أَدُلُّكَ أَوْ أَلاَ أُنَبِّئُكَ بِأَعْلَمِ أَهْلِ الأَرْضِ بِوَتْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قُلْتُ مَنْ قَالَ عَائِشَةُ ‏.‏ فَأَتَيْنَاهَا فَسَلَّمْنَا عَلَيْهَا وَدَخَلْنَا فَسَأَلْنَاهَا فَقُلْتُ أَنْبِئِينِي عَنْ وِتْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَتْ كُنَّا نُعِدُّ لَهُ سِوَاكَهُ وَطَهُورَهُ فَيَبْعَثُهُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَا شَاءَ أَنْ يَبْعَثَهُ مِنَ اللَّيْلِ فَيَتَسَوَّكُ وَيَتَوَضَّأُ ثُمَّ يُصَلِّي تِسْعَ رَكَعَاتٍ وَلاَ يَقْعُدُ فِيهِنَّ إِلاَّ فِي الثَّامِنَةِ فَيَحْمَدُ اللَّهَ وَيَذْكُرُهُ وَيَدْعُو ثُمَّ يَنْهَضُ وَلاَ يُسَلِّمُ ثُمَّ يُصَلِّي التَّاسِعَةَ فَيَجْلِسُ فَيَحْمَدُ اللَّهَ وَيَذْكُرُهُ وَيَدْعُو ثُمَّ يُسَلِّمُ تَسْلِيمًا يُسْمِعُنَا ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ فَتِلْكَ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يَا بُنَىَّ فَلَمَّا أَسَنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَخَذَ اللَّحْمَ أَوْتَرَ بِسَبْعٍ ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ بَعْدَ مَا يُسَلِّمُ فَتِلْكَ تِسْعًا أَىْ بُنَىَّ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا صَلَّى صَلاَةً أَحَبَّ أَنْ يُدَاوِمَ عَلَيْهَا ‏.‏
ஸுராரா பின் அவ்ஃபா அவர்கள் அறிவித்தார்கள்:

சஅத் பின் ஹிஷாம் பின் ஆமிர் அவர்கள் எங்களைச் சந்திக்க வந்தபோது, அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ர் தொழுகையைப் பற்றிக் கேட்டதாக எங்களிடம் கூறினார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ரைப் பற்றி பூமியிலேயே மிகவும் அறிந்தவரைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'யார் அவர்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷா (ரழி) அவர்கள்' என்று பதிலளித்தார்கள். எனவே நாங்கள் அவர்களிடம் சென்று, ஸலாம் கூறி, உள்ளே நுழைந்து அவர்களிடம் கேட்டோம். நான், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ரைப் பற்றி எனக்குக் கூறுங்கள்' என்றேன். அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: 'நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்காக அவர்களின் மிஸ்வாக்கையும், வுழூவிற்கான தண்ணீரையும் தயார் செய்து வைப்போம். பிறகு அல்லாஹ், இரவில் தான் நாடிய நேரத்தில் அவர்களை எழுப்புவான். அவர்கள் பல் துலக்கி, வுழூச் செய்துவிட்டு, ஒன்பது ரக்அத்கள் தொழுவார்கள். அதில் எட்டாவது ரக்அத் வரை அவர்கள் அமரமாட்டார்கள். பிறகு அவர்கள் (எட்டாவது ரக்அத்தில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனை நினைவு கூர்ந்து, துஆச் செய்வார்கள். பிறகு தஸ்லீம் கொடுக்காமல் எழுந்து நிற்பார்கள். பிறகு ஒன்பதாவது ரக்அத்தைத் தொழுதுவிட்டு, அமர்ந்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனை நினைவு கூர்ந்து, துஆச் செய்துவிட்டு, எங்களுக்குக் கேட்கும் விதத்தில் தஸ்லீம் கொடுப்பார்கள். அதன்பிறகு அமர்ந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஆக மொத்தம் பதினோரு ரக்அத்கள் ஆகும், என் அருமை மகனே. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வயது முதிர்ந்து, உடல் கனத்தபோது, அவர்கள் ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுதார்கள். பிறகு தஸ்லீம் கொடுத்த பின்னர் அமர்ந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். ஆக மொத்தம் ஒன்பது ரக்அத்கள் ஆகும், என் அருமை மகனே. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால், அதைத் தொடர்ந்து தொழுவதை விரும்புவார்கள்.'
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)
1342சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، قَالَ ‏:‏ طَلَّقْتُ امْرَأَتِي فَأَتَيْتُ الْمَدِينَةَ لأَبِيعَ عَقَارًا كَانَ لِي بِهَا، فَأَشْتَرِيَ بِهِ السِّلاَحَ وَأَغْزُوَ، فَلَقِيتُ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوا ‏:‏ قَدْ أَرَادَ نَفَرٌ مِنَّا سِتَّةٌ أَنْ يَفْعَلُوا ذَلِكَ فَنَهَاهُمُ النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ ‏:‏ ‏ ‏ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ ‏ ‏ ‏.‏ فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ فَسَأَلْتُهُ عَنْ وِتْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏:‏ أَدُلُّكَ عَلَى أَعْلَمِ النَّاسِ بِوِتْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأْتِ عَائِشَةَ رضى الله عنها ‏.‏ فَأَتَيْتُهَا فَاسْتَتْبَعْتُ حَكِيمَ بْنَ أَفْلَحَ فَأَبَى فَنَاشَدْتُهُ فَانْطَلَقَ مَعِي، فَاسْتَأْذَنَّا عَلَى عَائِشَةَ، فَقَالَتْ ‏:‏ مَنْ هَذَا قَالَ ‏:‏ حَكِيمُ بْنُ أَفْلَحَ ‏.‏ قَالَتْ ‏:‏ وَمَنْ مَعَكَ قَالَ ‏:‏ سَعْدُ بْنُ هِشَامٍ ‏.‏ قَالَتْ ‏:‏ هِشَامُ بْنُ عَامِرٍ الَّذِي قُتِلَ يَوْمَ أُحُدٍ قَالَ قُلْتُ ‏:‏ نَعَمْ ‏.‏ قَالَتْ ‏:‏ نِعْمَ الْمَرْءُ كَانَ عَامِرًا ‏.‏ قَالَ قُلْتُ ‏:‏ يَا أُمَّ الْمُؤْمِنِينَ حَدِّثِينِي عَنْ خُلُقِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَتْ ‏:‏ أَلَسْتَ تَقْرَأُ الْقُرْآنَ فَإِنَّ خُلُقَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ الْقُرْآنَ ‏.‏ قَالَ قُلْتُ ‏:‏ حَدِّثِينِي عَنْ قِيَامِ اللَّيْلِ قَالَتْ ‏:‏ أَلَسْتَ تَقْرَأُ ‏{‏ يَا أَيُّهَا الْمُزَّمِّلُ ‏}‏ قَالَ قُلْتُ ‏:‏ بَلَى ‏.‏ قَالَتْ ‏:‏ فَإِنَّ أَوَّلَ هَذِهِ السُّورَةِ نَزَلَتْ، فَقَامَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى انْتَفَخَتْ أَقْدَامُهُمْ، وَحُبِسَ خَاتِمَتُهَا فِي السَّمَاءِ اثْنَىْ عَشَرَ شَهْرًا، ثُمَّ نَزَلَ آخِرُهَا فَصَارَ قِيَامُ اللَّيْلِ تَطَوُّعًا بَعْدَ فَرِيضَةٍ ‏.‏ قَالَ قُلْتُ ‏:‏ حَدِّثِينِي عَنْ وِتْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ قَالَتْ ‏:‏ كَانَ يُوتِرُ بِثَمَانِ رَكَعَاتٍ لاَ يَجْلِسُ إِلاَّ فِي الثَّامِنَةِ، ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَةً أُخْرَى، لاَ يَجْلِسُ إِلاَّ فِي الثَّامِنَةِ وَالتَّاسِعَةِ، وَلاَ يُسَلِّمُ إِلاَّ فِي التَّاسِعَةِ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ فَتِلْكَ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يَا بُنَىَّ، فَلَمَّا أَسَنَّ وَأَخَذَ اللَّحْمَ أَوْتَرَ بِسَبْعِ رَكَعَاتٍ لَمْ يَجْلِسْ إِلاَّ فِي السَّادِسَةِ وَالسَّابِعَةِ، وَلَمْ يُسَلِّمْ إِلاَّ فِي السَّابِعَةِ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ، فَتِلْكَ هِيَ تِسْعُ رَكَعَاتٍ يَا بُنَىَّ، وَلَمْ يَقُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةً يُتِمُّهَا إِلَى الصَّبَاحِ، وَلَمْ يَقْرَإِ الْقُرْآنَ فِي لَيْلَةٍ قَطُّ، وَلَمْ يَصُمْ شَهْرًا يُتِمُّهُ غَيْرَ رَمَضَانَ، وَكَانَ إِذَا صَلَّى صَلاَةً دَاوَمَ عَلَيْهَا، وَكَانَ إِذَا غَلَبَتْهُ عَيْنَاهُ مِنَ اللَّيْلِ بِنَوْمٍ صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً ‏.‏ قَالَ ‏:‏ فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ فَحَدَّثْتُهُ ‏.‏ فَقَالَ ‏:‏ هَذَا وَاللَّهِ هُوَ الْحَدِيثُ، وَلَوْ كُنْتُ أُكَلِّمُهَا لأَتَيْتُهَا حَتَّى أُشَافِهَهَا بِهِ مُشَافَهَةً ‏.‏ قَالَ قُلْتُ ‏:‏ لَوْ عَلِمْتُ أَنَّكَ لاَ تُكَلِّمُهَا مَا حَدَّثْتُكَ ‏.‏
சஅத் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் என் மனைவியை விவாகரத்து செய்தேன். பிறகு மதீனாவிற்கு வந்தேன்; அங்கிருந்த எனக்குரிய நிலத்தை விற்று, அதில் (கிடைக்கும் பணத்தில்) ஆயுதங்கள் வாங்கி, (அல்லாஹ்வின் பாதையில்) போரிடுவதற்காக. அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலரைச் சந்தித்தேன். அவர்கள் கூறினார்கள்: "எங்களில் ஆறு பேர் அவ்வாறு செய்ய (அதாவது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஜிஹாத் செல்ல) விரும்பினோம். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அவர்களைத் தடுத்தார்கள். மேலும், 'நிச்சயமாக உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது' என்று கூறினார்கள்."

ஆகவே நான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் வந்து, நபி (ஸல்) அவர்களின் வித்ரு தொழுகையைப் பற்றிக் கேட்டேன். அதற்கவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வித்ரு தொழுகையைப் பற்றி மக்களில் நன்கு அறிந்த ஒருவரை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? நீர் ஆயிஷா (ரழி) அவர்களிடம் செல்லும்" என்று கூறினார்கள்.

நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் செல்லும்போது, ஹகீம் பின் அஃப்லஹ் என்பவரை என்னுடன் வருமாறு அழைத்தேன். அவர் மறுத்தார். நான் அவரிடம் அல்லாஹ்வைக் கொடுத்து (வற்புறுத்திக்) கேட்டேன். எனவே அவர் என்னுடன் புறப்பட்டார். நாங்கள் ஆயிஷா (ரழி) அவர்களிடம் (நுழைய) அனுமதி கேட்டோம். அவர்கள், "யார் இது?" என்று கேட்டார்கள். இவர், "ஹகீம் பின் அஃப்லஹ்" என்றார். அவர்கள், "உம்முடன் இருப்பது யார்?" என்று கேட்டார்கள். இவர், "சஅத் பின் ஹிஷாம்" என்றார். அவர்கள், "உஹுத் போரில் கொல்லப்பட்டாரே ஆமிர், அவருடைய மகன் ஹிஷாமா?" என்று கேட்டார்கள். நான், "ஆம்" என்றேன். அவர்கள், "ஆமிர் மிக நல்ல மனிதர்" என்று கூறினார்கள்.

நான், "முஃமின்களின் அன்னையே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டேன். அவர்கள், "நீர் குர்ஆனை ஓதுவதில்லையா? நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குணம் குர்ஆனாகவே இருந்தது" என்றார்கள்.

நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டேன். அவர்கள், "நீர் {‏ يَا أَيُّهَا الْمُزَّمِّلُ ‏} 'யா அய்யுஹல் முஸ்ஸம்மில்' (என்று தொடங்கும் அத்தியாயத்தை) ஓதுவதில்லையா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (ஓதுகிறேன்)" என்றேன்.

அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக இந்த அத்தியாயத்தின் ஆரம்பம் இறங்கியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் தங்கள் பாதங்கள் வீங்கும் அளவுக்கு (இரவு வணக்கத்தை) மேற்கொண்டார்கள். இவ்வத்தியாயத்தின் இறுதிப் பகுதி பன்னிரண்டு மாதங்கள் வானத்தில் தடுத்து வைக்கப்பட்டது. பிறகு அதன் இறுதிப் பகுதி இறங்கியது. ஆகவே, (கடினமான) கடமையாக இருந்த இரவுத் தொழுகை, (இலகுவான) உபரி வணக்கமானது."

நான், "நபி (ஸல்) அவர்களின் வித்ரு தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: "அவர்கள் எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். அதில் எட்டாவது ரக்அத்தைத் தவிர (இடையில்) எதிலும் அமரமாட்டார்கள். (எட்டாவதில் அமர்ந்து அத்தஹிய்யாத் ஓதிவிட்டு) பிறகு எழுந்து (ஒன்பதாவதாக) ஒரு ரக்அத் தொழுவார்கள். ஆக, எட்டாவது மற்றும் ஒன்பதாவது ரக்அத்களில் மட்டும்தான் அமர்வார்கள். ஒன்பதாவது ரக்அத்தில்தான் சலாம் கொடுப்பார்கள். பிறகு அமர்ந்தபடியே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். என் அருமை மகனே! அது பதினோரு ரக்அத்கள் ஆகும்.

நபி (ஸல்) அவர்கள் வயதாகி, உடல் பருமன் அடைந்தபோது ஏழு ரக்அத்கள் வித்ரு தொழுதார்கள். அதில் ஆறாவது மற்றும் ஏழாவது ரக்அத்களில் மட்டுமே அமர்வார்கள். ஏழாவது ரக்அத்தில்தான் சலாம் கொடுப்பார்கள். பிறகு அமர்ந்தபடியே இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். என் அருமை மகனே! அது ஒன்பது ரக்அத்கள் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தைத் தவிர வேறெந்த மாதத்திலும் முழுமையாக நோன்பு நோற்றதில்லை. ஒரே இரவில் குர்ஆன் முழுவதையும் ஓதியதில்லை. விடியும் வரை (தூங்காமல்) இரவு முழுவதும் நின்று வணங்கியதில்லை. அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதால் அதைத் தொடர்ந்து செய்வார்கள். இரவில் தூக்கம் அவர்களை மிகைத்துவிட்டால், (அதற்குப் பகரமாக) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்."

அறிவிப்பாளர் (சஅத்) கூறினார்: நான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடம் வந்து இச்செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது உண்மையான ஹதீஸ்தான். நான் அவர்களுடன் (ஆயிஷாவுடன்) பேசும் நிலையில் இருந்திருந்தால், நானே அவர்களிடம் சென்று, அவர்கள் வாயாலேயே இதைக் கேட்டிருப்பேன்" என்றார்கள். நான், "நீங்கள் அவர்களுடன் பேசுவதில்லை என்று தெரிந்திருந்தால், நான் இதை உங்களிடம் அறிவித்திருக்கவே மாட்டேன்" என்றேன்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)