அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்:
"நான் (இஸ்ரா பயணமாக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில், செம்மணல் குன்றுக்கு அருகில் மூஸா (அலை) அவர்களிடம் வந்தேன். - ஹத்தாப் என்பாரின் அறிவிப்பில் 'நான் (அவர்களைக்) கடந்து சென்றேன்' என்றுள்ளது. - அப்போது அவர்கள் தமது கப்ரில் நின்றுகொண்டு தொழுது கொண்டிருந்தார்கள்."