இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1352சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنِ الْحَسَنِ، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ، قَالَ ‏:‏ قَدِمْتُ الْمَدِينَةَ فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقُلْتُ ‏:‏ أَخْبِرِينِي عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ قَالَتْ ‏:‏ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي بِالنَّاسِ صَلاَةَ الْعِشَاءِ، ثُمَّ يَأْوِي إِلَى فِرَاشِهِ فَيَنَامُ، فَإِذَا كَانَ جَوْفُ اللَّيْلِ قَامَ إِلَى حَاجَتِهِ وَإِلَى طَهُورِهِ فَتَوَضَّأَ، ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى ثَمَانِ رَكَعَاتٍ يُخَيَّلُ إِلَىَّ أَنَّهُ يُسَوِّي بَيْنَهُنَّ فِي الْقِرَاءَةِ وَالرُّكُوعِ وَالسُّجُودِ، ثُمَّ يُوتِرُ بِرَكْعَةٍ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ، ثُمَّ يَضَعُ جَنْبَهُ، فَرُبَّمَا جَاءَ بِلاَلٌ فَآذَنَهُ بِالصَّلاَةِ، ثُمَّ يُغْفِي، وَرُبَّمَا شَكَكْتُ أَغَفَى أَوْ لاَ، حَتَّى يُؤْذِنَهُ بِالصَّلاَةِ، فَكَانَتْ تِلْكَ صَلاَتَهُ حَتَّى أَسَنَّ وَلَحُمَ، فَذَكَرَتْ مِنْ لَحْمِهِ مَا شَاءَ اللَّهُ، وَسَاقَ الْحَدِيثَ ‏.‏
ஸஅத் பின் ஹிஷாம் அவர்கள் கூறினார்கள்:
நான் மதீனாவிற்கு வந்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். நான் (அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு இஷாத் தொழுகையைத் தொழுவிப்பார்கள்; பின்னர் தங்கள் படுக்கைக்குச் சென்று உறங்குவார்கள். இரவின் நடுப்பகுதி வந்ததும், அவர்கள் எழுந்து, (இயற்கைத்) தேவையை நிறைவேற்றி, ஒுளு செய்யுமிடத்திற்குச் சென்று உளூச் செய்வார்கள். பின்னர் பள்ளிவாசலுக்குள் நுழைந்து எட்டு ரக்அத்கள் தொழுவார்கள். (அத்தொழுகையில்) ஓதுதல், ருகூஃ செய்தல், ஸஜ்தா செய்தல் ஆகியவற்றை அவர்கள் சமமான அளவில் செய்வதாகவே எனக்குத் தோன்றும்.

பின்னர் ஒரு ரக்அத் வித்ரு தொழுதுவிட்டு, அமர்ந்த நிலையில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு (படுக்கையில்) சாய்ந்து படுப்பார்கள். சில வேளைகளில் பிலால் வந்து தொழுகைக்காக அவர்களுக்கு அறிவிப்பார்; பின்னர் அவர்கள் (சிறிது) கண்ணயருவார்கள். பிலால் வந்து தொழுகைக்காக அறிவிப்புச் செய்யும் வரை அவர்கள் கண்ணயர்ந்தார்களா இல்லையா என்று நான் சந்தேகம் கொள்ளும் அளவிற்கு (அது இருக்கும்). அவர்களுக்கு வயதாகி உடல் சதை பற்றும் வரை அவர்களின் தொழுகை இதுவாகவே இருந்தது.”

பிறகு அல்லாஹ் நாடியவாறு அவர்களின் உடல் எடை கூடியதை ஆயிஷா (ரலி) குறிப்பிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)