ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தூக்கம் அல்லது வலியின் காரணமாக இரவில் (தஹஜ்ஜுத்) தொழாமல் விட்டுவிட்டால், பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் (அதாவது, இரவின் தொழுகைக்குப் பகரமாக).
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரே இரவில் முழு குர்ஆனையும் ஓதியதாகவோ, விடியும் வரை (தொழுகையில்) நின்று வணங்கியதாகவோ, ரமழானைத் தவிர வேறு எந்த மாதத்திலும் முழு மாதமும் நோன்பு நோற்றதாகவோ நான் அறியவில்லை.