அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வித்ர் தொழுகையில் ‘சப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா’ (என்ற அத்தியாயத்தை) ஓதுவார்கள். (இந்த அறிவிப்புத் தொடரில்) ஷபாபா (என்ற அறிவிப்பாளர்) (முந்தைய அறிவிப்பாளர்களுடன்) மாறுபட்டு, ஷுஃபாவிடமிருந்து, கதாதாவிடமிருந்து, சுராறா பின் அவ்ஃபாவிடமிருந்து, இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடமிருந்து (இந்த ஹதீஸை) அறிவித்தார்.