இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1757சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ لاَ يَدَعُ أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ ‏.‏ خَالَفَهُ عَامَّةُ أَصْحَابِ شُعْبَةَ مِمَّنْ رَوَى هَذَا الْحَدِيثَ فَلَمْ يَذْكُرُوا مَسْرُوقًا ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்ததாவது:
நபி (ஸல்) அவர்கள் ளுஹ்ருக்கு முன் நான்கு ரக்அத்துகளையும், ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்துகளையும் (தவறாமல்) தொழுது வந்தார்கள்.
(இந்த ஹதீஸை அறிவித்த) ஷுஃபாவுடைய பெரும்பாலான மாணவர்கள், (இந்த அறிவிப்பில்) மஸ்ரூக்கைக் குறிப்பிடாமல் (அறிவித்ததன் மூலம்) மாறுபட்டனர்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)