ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஃபஜ்ரு தெளிவாகத் தெரிந்த பின்னர், ஃபஜ்ரு தொழுகையின் முதல் பாங்கு (அதாவது அதான்) முடிந்ததும், ஃபஜ்ருடைய (கட்டாயத்) தொழுகைக்கு முன் இரண்டு லேசான ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் அவர்கள், முஅத்தின் அவர்கள் இகாமத் சொல்ல வரும்வரை தமது வலப்பக்கத்தில் சாய்ந்து கொள்வார்கள்.