أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ أَنْبَأَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَرْكَعُ بَيْنَ النِّدَاءِ وَالصَّلاَةِ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஹஃப்ஸா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைப்பிற்கும் (பாங்கிற்கும்) தொழுகைக்கும் இடையில் இரண்டு சுருக்கமான ரக்அத்களைத் தொழுவார்கள்."
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஹஃப்ஸா (ரழி) அவர்கள் தன்னிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸுப்ஹு தொழுகையின் அதானுக்கும் இகாமத்திற்கும் இடையில் சுருக்கமான இரண்டு ரக்அத்கள் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று கூறினார்கள்.