حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ أَخْبَرَتْنِي حَفْصَةُ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا اعْتَكَفَ الْمُؤَذِّنُ لِلصُّبْحِ وَبَدَا الصُّبْحُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلاَةُ.
ஹஃப்ஸா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
முஅத்தின் ஃபஜ்ர் தொழுகைக்காக (அதான் கூறி) முடித்து, வைகறை புலப்பட்டதும், தொழுகைக்கு இகாமத் சொல்லப்படுவதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் இலேசாகத் தொழுவார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: மூஃமின்களின் அன்னையான ஹஃப்ஸா (ரழி) அவர்கள் தன்னிடம் கூறினார்கள்:
சுப்ஹுத் தொழுகைக்காக முஅத்தின் பாங்கு சொல்லி முடித்ததும், வைகறைப் பொழுது புலர்ந்ததும், தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுவதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ حَفْصَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا سَكَتَ الْمُؤَذِّنُ عَنِ الأَذَانِ لِصَلاَةِ الصُّبْحِ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ تُقَامَ الصَّلاَةُ .
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியான ஹஃப்ஸா (ரழி) அவர்கள் தம்மிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஅத்தின் ஸுப்ஹு தொழுகைக்கான அதானை முடித்ததும், தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுவதற்கு முன்பு, இரண்டு விரைவான ரக்அத்கள் தொழுவார்கள்" என்று கூறினார்கள்.