أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ إِذَا نُودِيَ لِصَلاَةِ الصُّبْحِ رَكَعَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ قَبْلَ أَنْ يَقُومَ إِلَى الصَّلاَةِ .
ஹஃப்ஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
சுப்ஹு தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்பு சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: மூஃமின்களின் அன்னையான ஹஃப்ஸா (ரழி) அவர்கள் தன்னிடம் கூறினார்கள்:
சுப்ஹுத் தொழுகைக்காக முஅத்தின் பாங்கு சொல்லி முடித்ததும், வைகறைப் பொழுது புலர்ந்ததும், நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக எழுவதற்கு முன்பு சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.