இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1614சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي حُيَىُّ بْنُ عَبْدِ اللَّهِ الْمَعَافِرِيُّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ تُوُفِّيَ رَجُلٌ بِالْمَدِينَةِ مِمَّنْ وُلِدَ بِالْمَدِينَةِ فَصَلَّى عَلَيْهِ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ: ‏"‏ يَا لَيْتَهُ مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ مِنَ النَّاسِ وَلِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: ‏"‏ إِنَّ الرَّجُلَ إِذَا مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ قِيسَ لَهُ مِنْ مَوْلِدِهِ إِلَى مُنْقَطَعِ أَثَرِهِ فِي الْجَنَّةِ ‏"‏ ‏.‏
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

“மதீனாவில் ஒரு மனிதர் இறந்தார், அவர் மதீனாவிலேயே பிறந்தவர்களில் ஒருவர். நபி (ஸல்) அவர்கள் அவருக்காக ஜனாஸா தொழுகை நடத்திவிட்டு, “இவர் தனது பிறந்த ஊரைத் தவிர வேறு எங்காவது இறந்திருக்க வேண்டுமே!” என்று கூறினார்கள். மக்களில் ஒருவர், “ஏன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஒருவர் தனது பிறந்த ஊரைத் தவிர வேறு எங்காவது இறந்துவிட்டால், அவர் பிறந்த இடத்திலிருந்து அவர் இறந்த இடம் வரையிலான தூரத்தின் அளவிற்கு சொர்க்கத்தில் அவருக்காக இடம் அளக்கப்படும்” என்று கூறினார்கள்.”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)