அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மரணத்தருவாயில் இருந்த தங்களின் மகளார் ஒருவரை எடுத்து, அவரைத் தழுவித் தம் முன்னிலையில் கிடத்தினார்கள். அவர் நபி (ஸல்) அவர்களின் முன்னிலையிலேயே மரணமடைந்தார். (அப்போது) உம்மு அய்மன் (ரழி) சப்தமிட்டு அழுதார்கள். எனவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரின் முன்னிலையிலா (இவ்வாறு சப்தமிட்டு) அழுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'தாங்கள் அழுவதை நான் பார்க்கவில்லையா?' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'நான் (உம்மைப் போன்று சப்தமிட்டு) அழவில்லை. இது உண்மையில் (என் உள்ளத்தில் ஏற்பட்ட) ஒரு கருணையாகும். ஒரு முஃமின் (விசுவாசி) ஒவ்வொரு நிலையிலும் நன்மையிலேயே இருப்பான். (ஏனெனில்) அவனது உயிர் அவனது விலா எலும்புகளுக்கு இடையிலிருந்து (உடலிலிருந்து) பிரிக்கப்படும்போது, அவன் அல்லாஹ்வை (சர்வ வல்லமையும் மாண்பும் மிக்கவன்) புகழ்ந்து கொண்டிருப்பான்' என்று கூறினார்கள்.