முஃமின்களின் அன்னையான ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒரு சிறுவனின் ஜனாஸாவிற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு நற்பாக்கியம் உண்டாகட்டும்! இவர் சுவர்க்கத்துச் சிட்டுக்குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி. இவர் தீமை ஏதும் செய்யவில்லை; அதைச் செய்யும் (பருவ) வயதையும் அடையவில்லை" என்று கூறினேன்.
அதற்கு அவர்கள், "ஆயிஷாவே! (விஷயம்) இதுவல்லாத வேறொன்றாகவும் இருக்கலாமே! நிச்சயமாக அல்லாஹ் சுவர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான்; அவர்கள் தங்கள் தந்தையர்களின் முதுகெலும்புகளில் இருக்கும்போதே அவர்களுக்கென அதனை அவன் படைத்துவிட்டான். மேலும் நரகத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான்; அவர்கள் தங்கள் தந்தையர்களின் முதுகெலும்புகளில் இருக்கும்போதே அவர்களுக்கென அதனை அவன் படைத்துவிட்டான்" என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம் அன்சாரிச் சிறுவன் ஒருவன் (ஜனாஸாத்) தொழுகைக்காகக் கொண்டுவரப்பட்டான். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! இவன் பாக்கியசாலி. ஏனெனில் இவன் எந்தத் தீமையும் செய்யவில்லை, அதைப்பற்றி அறியவும் இல்லை" என்று கூறினேன். அதற்கு அவர்கள், "ஆயிஷாவே! (நீ நினைப்பது போலன்றி) வேறு விதமாகவும் இருக்கலாமே? நிச்சயமாக அல்லாஹ் சொர்க்கத்தைப் படைத்தான்; அதற்கானவர்களையும் படைத்தான்; அவர்கள் தங்கள் தந்தையர்களின் முதுகெலும்புகளில் இருக்கும்போதே அவர்களுக்காக அதை அவன் படைத்துவிட்டான். மேலும், அவன் நரகத்தைப் படைத்தான்; அதற்கானவர்களையும் படைத்தான்; அவர்கள் தங்கள் தந்தையர்களின் முதுகெலும்புகளில் இருக்கும்போதே அவர்களுக்காக அதை அவன் படைத்துவிட்டான்" என்று பதிலளித்தார்கள்.
இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு சிறுவனின் ஜனாஸாவிற்கு (இறுதிச் சடங்கிற்கு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். நான் கூறினேன்: 'அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு நற்செய்தி (டூபா)! இவர் சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக் குருவி; இவர் எந்தத் தீமையும் செய்யவில்லை, தீமை செய்யும் பருவத்தையும் இவர் அடையவில்லை.' அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'ஆயிஷாவே! (விஷயம்) வேறு விதமாக இருக்கலாமல்லவா? ஏனெனில் அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்தான்; அவர்கள் தங்கள் தந்தையரின் முதுகுத் தண்டுகளில் இருந்தபோதே அதற்காக அவர்களைப் படைத்தான். மேலும் அவன் நரகத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான்; அவர்கள் தங்கள் தந்தையரின் முதுகுத் தண்டுகளில் இருந்தபோதே அதற்காக அவர்களைப் படைத்தான்.'"