நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு ஜனாஸா (மய்யித்) கொண்டு வரப்பட்டது. (மக்கள்), "இதற்குத் தொழுகை நடத்துங்கள்" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "இவர் மீது கடன் ஏதேனும் உள்ளதா?" என்று கேட்டார்கள். மக்கள் "இல்லை" என்றனர். நபி (ஸல்) அவர்கள், "இவர் (செல்வம்) எதையாவது விட்டுச் சென்றுள்ளாரா?" என்று கேட்டார்கள். மக்கள் "இல்லை" என்றனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
பிறகு மற்றொரு ஜனாஸா (மய்யித்) கொண்டு வரப்பட்டது. மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதற்குத் தொழுகை நடத்துங்கள்" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "இவர் மீது கடன் உள்ளதா?" என்று கேட்டார்கள். "ஆம்" என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "இவர் எதையாவது விட்டுச் சென்றுள்ளாரா?" என்று கேட்டார்கள். மக்கள், "மூன்று தீனார்கள்" என்றனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
பிறகு மூன்றாவது (ஜனாஸா) கொண்டு வரப்பட்டது. மக்கள், "இதற்குத் தொழுகை நடத்துங்கள்" என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், "இவர் எதையாவது விட்டுச் சென்றுள்ளாரா?" என்று கேட்டார்கள். மக்கள் "இல்லை" என்றனர். நபி (ஸல்) அவர்கள், "இவர் மீது கடன் ஏதேனும் உள்ளதா?" என்று கேட்டார்கள். மக்கள் "மூன்று தீனார்கள்" என்றனர். நபி (ஸல்) அவர்கள், "உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்" என்று கூறினார்கள். அப்போது அபூ கதாதா (ரலி), "அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தாங்கள் தொழுகை நடத்துங்கள்; இவருடைய கடனுக்கு நான் பொறுப்பு" என்று கூறினார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِجَنَازَةٍ، لِيُصَلِّيَ عَلَيْهَا، فَقَالَ " هَلْ عَلَيْهِ مِنْ دَيْنٍ ". قَالُوا لاَ. فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ أُتِيَ بِجَنَازَةٍ أُخْرَى، فَقَالَ " هَلْ عَلَيْهِ مَنْ دَيْنٍ ". قَالُوا نَعَمْ. قَالَ " صَلُّوا عَلَى صَاحِبِكُمْ ". قَالَ أَبُو قَتَادَةَ عَلَىَّ دَيْنُهُ يَا رَسُولَ اللَّهِ. فَصَلَّى عَلَيْهِ.
ஸலமா பின் அல்-அக்வஃ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக (இறந்த) ஒருவர் கொண்டுவரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள், ''அவருக்குக் கடன் ஏதேனும் உள்ளதா?'' என்று கேட்டார்கள். மக்கள் ''இல்லை'' என்று கூறியபோது, அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டுவரப்பட்டது. ''அவருக்குக் கடன் ஏதேனும் உள்ளதா?'' என்று அவர்கள் கேட்டார்கள். மக்கள் ''ஆம்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ''உங்கள் தோழருக்கு நீங்களே தொழுவித்துக் கொள்ளுங்கள் (நான் அவருக்குத் தொழுகை நடத்த மாட்டேன்)'' என்று கூறினார்கள். அப்போது அபூ கதாதா (ரழி), ''அல்லாஹ்வின் தூதரே! அவரது கடனுக்கு நான் பொறுப்பேற்கிறேன்'' என்று கூறினார்கள். அதன் பின்னர் நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.