அப்பாத் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் அவர்கள் அறிவித்தார்கள்:
ஆயிஷா (ரழி) அவர்கள், ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களின் ஜனாஸாவை (அதாவது, சடலத்தை வைக்கப்பட்டிருந்த பாடையை) பள்ளிவாசலுக்குள் கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்கள், அதன் மீது தாம் தொழுகை நடத்துவதற்காக. மக்கள் அதை ஆட்சேபித்தார்கள். அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள், "மக்கள் எவ்வளவு விரைவாக மறந்துவிட்டார்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைல் இப்னு பைளா (ரழி) அவர்களுக்குப் பள்ளிவாசலுக்குள்ளே தவிர (வேறு எங்கும்) ஜனாஸா தொழுகை நடத்தவில்லை." என்று கூறினார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைல் பின் பைளா (ரழி) அவர்களின் ஜனாஸா தொழுகையை மஸ்ஜிதிற்குள் அன்றி வேறு எங்கும் தொழவில்லை.”
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுஹைல் இப்னு பைளா (ரழி) அவர்களுக்குப் பள்ளிவாசலில் மட்டுமே (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள்.