பொருள்: "யா அல்லாஹ்! எங்களில் உயிருடன் இருப்பவர்களையும், எங்களில் இறந்துவிட்டவர்களையும், எங்களில் சிறியவர்களையும், எங்களில் பெரியவர்களையும், எங்களில் ஆண்களையும், எங்களில் பெண்களையும், எங்களில் இங்கு இருப்பவர்களையும், இங்கு இல்லாதவர்களையும் நீ மன்னிப்பாயாக! யா அல்லாஹ்! எங்களில் நீ யாரை உயிர் வாழச் செய்கிறாயோ அவரை ஈமானுடன் (இறைநம்பிக்கையுடன்) வாழச் செய்வாயாக! மேலும் எங்களில் யாரை நீ மரணிக்கச் செய்கிறாயோ அவரை இஸ்லாத்தின் மீதே மரணிக்கச் செய்வாயாக! யா அல்லாஹ்! இவருடைய நற்கூலியை எங்களுக்குத் தடுத்துவிடாதே! மேலும் இவருக்குப் பின் எங்களை வழிதவறச் செய்துவிடாதே!"