தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"நான் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குப் பின்னால் ஜனாஸாத் தொழுகையை தொழுதேன், அப்போது அவர்கள் ஃபாத்திஹதுல் கிதாப் ஓதுவதை நான் கேட்டேன். அவர்கள் முடித்ததும், நான் அவர்களுடைய கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'நீங்கள் ஓதினீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆம், அது சத்தியமானதும் சுன்னாவுமாகும்' என்று கூறினார்கள்."