நாஃபிஃ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்: இப்னு உமர் (ரழி) அவர்களிடம், அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டதாகச் சொன்னார்கள் என்று கூறப்பட்டது:
"யார் ஒரு ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்கிறாரோ, அவருக்கு ஒரு கீராத் நன்மை உண்டு."
(இதைக் கேட்ட) இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் (இத்தகைய செய்திகளை) மிக அதிகமாகவே அறிவிக்கிறார் (அல்லது 'கூறுகிறார்')."
எனவே, அவர் (இப்னு உமர் (ரழி) அவர்கள்) (இந்தச் செய்தியின்) உண்மையை உறுதிப்படுத்திக்கொள்ள ஆயிஷா (ரழி) அவர்களிடம் (ஒரு தூதரை) அனுப்பினார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அபூ ஹுரைரா (ரழி) அவர்களை உண்மைப்படுத்தினார்கள்.