அபுல் ஹய்யாஜ் அல்-அஸதீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அலி பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அனுப்பிய அதே பணிக்காக நான் உங்களை அனுப்பட்டுமா? (அது யாதெனில்,) எந்தவொரு உருவச்சிலையையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; உயர்ந்திருக்கும் எந்தக் கபுரையும் சமப்படுத்தாமல் விட்டுவிடாதீர்.”
மற்றோர் அறிவிப்பில், “எந்தவொரு உருவப்படத்தையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்” என்று வந்துள்ளது.
அபூ ஹய்யாஜ் அல்-அசதி அவர்கள் கூறினார்கள்: அலி (ரழி) அவர்கள் என்னை (ஒரு பணிக்காக) அனுப்பிவிட்டு, என்னிடம் கூறினார்கள்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை எந்தப் பணிக்காக அனுப்பினார்களோ, அதே பணிக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அது யாதெனில்,) உயரமான எந்தக் கப்றையும் சமப்படுத்தாமலும், எந்த உருவத்தையும் அழிக்காமலும் நீர் விட்டுவிடக் கூடாது.'
وعن أبي الهياج حيان بن حصين قال: قال لي علي بن أبي طالب رضي الله عنه: ألا أبعثك على ما بعثني عليه رسول الله صلى الله عليه وسلم ؟ أن لا تدع صورة إلا طمستها، ولا قبرًا مشرفًا إلا سويته. ((رواه مسلم)).
அபுல் ஹய்யாஜ் ஹய்யான் இப்னு ஹுஸைன் அறிவிக்கிறார்கள்: அலி இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தப் பணிக்காக என்னை அனுப்பினார்களோ, அதே பணிக்காக நானும் உன்னை அனுப்பட்டுமா? (அது என்னவெனில்): எந்த ஓர் உருவச் சிலையையும் (அல்லது உருவப் படத்தையும்) நீ அழிக்காமல் விட்டுவிடாதே; (தரை மட்டத்தை விட) உயர்த்தப்பட்ட எந்தக் கல்லறையையும் நீ தரைமட்டமாக்காமல் விடாதே." (ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)