حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، قَالَ سَمِعْتُ أَبَا صَالِحٍ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ .
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கப்றுகளை தரிசிக்கும் பெண்களையும், அவற்றின் மீது மஸ்ஜிதுகளை எழுப்புபவர்களையும், விளக்குகளை ஏற்றுபவர்களையும் சபித்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"கப்ருகளை சந்திக்கும் பெண்களையும், அவற்றை மஸ்ஜிதுகளாக ஆக்கிக் கொள்பவர்களையும், அவற்றின் மீது விளக்குகளை ஏற்றுபவர்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்."
حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، عَنْ أَبِي صَالِحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ زُوَّارَاتِ الْقُبُورِ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
“கப்ருகளை தரிசிக்கும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.”