இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3878ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، حَدَّثَنَا قَتَادَةُ، أَنَّ عَطَاءً، حَدَّثَهُمْ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ ـ رضى الله عنهما ـ أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى عَلَى النَّجَاشِيِّ فَصَفَّنَا وَرَاءَهُ فَكُنْتُ فِي الصَّفِّ الثَّانِي أَوِ الثَّالِثِ‏.‏
ஜாபிர் பின் அப்துல்லாஹ் அல்-அன்சாரி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்ஜாஷி (அபிசீனிய மன்னர்) அவர்களுக்காக (அவர் மறைந்தபின்) ஜனாஸாத் தொழுதார்கள். அப்போது எங்களைத் தங்களுக்குப் பின்னால் வரிசைகளாக நிற்கச் செய்தார்கள். நான் இரண்டாவது அல்லது மூன்றாவது வரிசையில் இருந்தேன்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح