அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(அறிந்து கொள்ளுங்கள்!) (ரமளான்) மாதத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக நோன்பு நோற்காதீர்கள்; வழக்கமாக (தன்னார்வ) நோன்பு நோற்கும் ஒருவரைத் தவிர. அவ்வாறாயின், அவர் அந்த (வழக்கமான) நோன்பை நோற்கட்டும்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமளான் மாதத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னதாக (ரமளானை முன்னிட்டு) நோன்பு நோற்காதீர்கள். ஒருவர் வழமையாக (தொடர்ச்சியாக) நோன்பு நோற்கும் நாளாக அது அமைந்தால் தவிர, அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்.”