அபூ ஸயீத் அல்-குத்ரீ (ரழி), ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணம் செய்தோம். (அப்போது எங்களில்) நோன்பு நோற்பவர் நோன்பு நோற்பார்; நோன்பை விட்டுவிடுபவர் நோன்பை விட்டுவிடுவார். (எனினும்) அவர்களில் எவரும் ஒருவரையொருவர் குறை கூறுவதில்லை.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் இருந்தனர், நோன்பு நோற்காதவர்களும் இருந்தனர். நோன்பு நோற்றவர்கள் நோன்பு நோற்காதவர்களைக் குறை கூறவில்லை, நோன்பு நோற்காதவர்கள் நோன்பு நோற்றவர்களையும் குறை கூறவில்லை.