“வஅலல் லதீன யுதீகூனஹு ஃபித்யதுன் தஆமு மிஸ்கீன்” (பொருள்: “எவர்கள் நோன்பு நோற்கச் சக்தியுடையவர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் ஒரு ஏழைக்கு உணவளித்துப் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்”) என்ற இறைவசனம் அருளப்பட்டபோது, எவர் நோன்பை விட்டுவிட்டுப் பரிகாரம் செலுத்த விரும்பினாரோ அவர் (அவ்வாறு) செய்துவந்தார்; இதற்கு அடுத்த வசனம் அருளப்பட்டு இதனை ரத்து செய்யும் வரை (இந்நிலை இருந்தது).
ஸலமா இப்னு அக்வா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"வ அலல்லதீன யுத்(த)ீகூனஹு ஃபித்யதுன் தஆமு மிஸ்கீன்" என்ற இறைவசனம் அருளப்பட்டபோது, (நோன்பு நோற்க சக்தி இருந்தும்) நோன்பு நோற்காமல் பரிகாரம் செய்ய விரும்பியவர்கள் (அவ்வாறு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர்). அதன் பிறகுள்ள வசனம் அருளப்பட்டு, இதனை ரத்து செய்யும் வரை (இந்த நடைமுறை) இருந்தது.
ஸலமா பின் அல்-அக்வா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“வஅலல்லதீன யுதீகூனஹு ஃபித்யதுன் தஆமு மிஸ்கீன்” (நோன்பிருக்கச் சக்தி பெற்றவர்கள் மீது (விரும்பினால் நோன்பை விட்டுவிட்டு) ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்.) என்ற இந்த வசனம் அருளப்பட்டபோது, எங்களில் நோன்பை விட்டுவிட்டுப் பரிகாரம் செலுத்த விரும்பியவர் அவ்வாறு செய்து வந்தார். இதற்குப் பிந்தைய வசனம் அருளப்பட்டு, இதனை ரத்து செய்யும் வரை இந்நிலை இருந்தது.
ஸலமா பின் அல்-அக்வஅ (ரலி) அவர்கள் கூறினார்கள்: “‘வஅலல்லதீன யுதீகூனஹு ஃபித்யதுன் தஆமு மிஸ்கீன்’ (மேலும் எவர்கள் நோன்பு நோற்க சக்தி பெற்றிருந்தும் (நோன்பு நோற்காமல் இருக்க) விரும்புகிறார்களோ, அவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும்) என்ற வசனம் அருளப்பட்டபோது, அதனை ரத்து செய்யும் அதற்குப் பின்னாலுள்ள வசனம் அருளப்படும் வரை, எங்களில் விரும்பியவர் நோன்பு நோற்காமல் பரிகாரம் கொடுத்து வந்தார்.