حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ شَهِدْنَا بِنْتًا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَالِسٌ عَلَى الْقَبْرِ ـ قَالَ فَرَأَيْتُ عَيْنَيْهِ تَدْمَعَانِ قَالَ ـ فَقَالَ " هَلْ مِنْكُمْ رَجُلٌ لَمْ يُقَارِفِ اللَّيْلَةَ ". فَقَالَ أَبُو طَلْحَةَ أَنَا. قَالَ " فَانْزِلْ ". قَالَ فَنَزَلَ فِي قَبْرِهَا.
அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களின் புதல்வியர் ஒருவருடைய ஜனாஸாவில் (அடக்கத்தில்) கலந்துகொண்டோம். நபி (ஸல்) அவர்கள் கப்ரின் ஓரத்தில் அமர்ந்திருந்தார்கள். (அப்போது) அவர்களின் கண்கள் கண்ணீர் சிந்துவதை நான் கண்டேன். அவர்கள், "உங்களில் நேற்றிரவு (தம் மனைவியுடன்) தாம்பத்திய உறவு கொள்ளாதவர் எவரேனும் இருக்கிறாரா?" என்று கேட்டார்கள். அதற்கு அபூ தல்ஹா (ரழி), "நான் (உள்ளேன்)" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் இறங்குவீராக" என்றார்கள். ஆகவே, அவர் அவளுடைய கப்ரில் இறங்கினார்.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) கூறினார்கள்:
“நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் புதல்வியர் ஒருவரின் (ஜனாஸாவில்) கலந்து கொண்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவரது) கப்ரின் அருகே அமர்ந்திருந்தார்கள். அவர்களின் கண்கள் கண்ணீர் சிந்துவதை நான் கண்டேன். பின்னர் அவர்கள், 'இன்று இரவு (தன் மனைவியுடன்) தாம்பத்திய உறவு கொள்ளாதவர் உங்களில் எவரேனும் உண்டா?' என்று கேட்டார்கள். அபூ தல்ஹா (ரழி), ‘நான் (உள்ளேன்)’ என்று கூறினார்கள். அவர்கள், ‘(கப்ருக்குள்) இறங்குங்கள்’ என்று கூறினார்கள். எனவே அவர் அவளுடைய கப்ருக்குள் இறங்கினார்கள்.”