இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2328சுனனுந் நஸாயீ
أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنِ الْقَاسِمِ بْنِ مَعْنٍ، عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى، عَنْ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ، وَمُجَاهِدٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَتَاهَا فَقَالَ ‏"‏ هَلْ عِنْدَكُمْ طَعَامٌ ‏"‏ ‏.‏ فَقُلْتُ لاَ ‏.‏ قَالَ ‏"‏ إِنِّي صَائِمٌ ‏"‏ ‏.‏ ثُمَّ جَاءَ يَوْمًا آخَرَ فَقَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا قَدْ أُهْدِيَ لَنَا حَيْسٌ فَدَعَا بِهِ فَقَالَ ‏"‏ أَمَا إِنِّي قَدْ أَصْبَحْتُ صَائِمًا ‏"‏ ‏.‏ فَأَكَلَ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, "உங்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்று கூறினேன். அதற்கு அவர்கள், "(அப்படியாயின்) நான் நோன்பிருக்கிறேன்" என்று கூறினார்கள். பின்னர் மற்றொரு நாள் அவர்கள் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நமக்கு 'ஹைஸ்' அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது" என்று ஆயிஷா (ரழி) கூறினார்கள். அதற்கு அவர்கள் அதைத் தருமாறு கேட்டு, "நான் நோன்பு நோற்றவனாகவே காலையில் எழுந்தேன்" என்று கூறிவிட்டு, பின்னர் அதைச் சாப்பிட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (தாருஸ்ஸலாம் பதிப்பு)