இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, “உங்களிடம் சாப்பிட ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நாங்கள், “இல்லை” என்றோம். அதன்பின் அவர்கள், “அப்படியானால் நான் நோன்பு நோற்கிறேன்” என்று கூறினார்கள். பின்னர் மற்றொரு நாள் அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே, எங்களுக்கு ‘ஹைஸ்’ அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது” என்று கூறினோம். அதற்கு அவர்கள், “அதை எனக்குக் காட்டு; நான் காலை முதல் நோன்பு நோற்றிருந்தேன்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள்.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்து, "உங்களிடம் காலை உணவு ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்பார்கள். நாங்கள் "இல்லை" என்று சொல்வோம். அதற்கு அவர்கள், "நான் நோன்பிருக்கிறேன்" என்று கூறுவார்கள். ஒரு நாள் அவர்கள் எங்களிடம் வந்தபோது, எங்களுக்கு 'ஹைஸ்' அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்தது. அவர்கள், "உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நாங்கள், "ஆம், எங்களுக்கு 'ஹைஸ்' அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினோம். அதற்கு அவர்கள், "நான் காலையில் நோன்பு நோற்கவே நாடியிருந்தேன்" என்றார்கள். பிறகு சாப்பிட்டார்கள்.
இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் என்னிடம் வருவார்கள்; "இன்று காலையில் எனக்கு உண்ணக் கொடுப்பதற்கு உங்களிடம் ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்பார்கள். நாங்கள் 'இல்லை' என்று கூறுவோம். அப்போது அவர்கள், "அப்படியானால் நான் நோன்பாளியாக இருக்கிறேன்" என்று கூறுவார்கள்.
பிறகு மற்றொரு நாள் அவர்கள் வந்தார்கள். அப்போது, "எங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினேன்.
அதற்கு அவர்கள், "அது என்ன?" என்று கேட்டார்கள். நான் "ஹைஸ்" என்று கூறினேன்.
அதற்கு அவர்கள், "நான் காலையில் நோன்பாளியாகவே இருந்தேன்" என்று கூறினார்கள். பிறகு அதைச் சாப்பிட்டார்கள்.