இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

24 aஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى التُّجِيبِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدَ عِنْدَهُ أَبَا جَهْلٍ وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ يَا عَمِّ قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ‏.‏ كَلِمَةً أَشْهَدُ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ ‏"‏ ‏.‏ فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ يَا أَبَا طَالِبٍ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ ‏.‏ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْرِضُهَا عَلَيْهِ وَيُعِيدُ لَهُ تِلْكَ الْمَقَالَةَ حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ هُوَ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ ‏.‏ وَأَبَى أَنْ يَقُولَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَمَا وَاللَّهِ لأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ ‏"‏ ‏.‏ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ وَلَوْ كَانُوا أُولِي قُرْبَى مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمْ أَنَّهُمْ أَصْحَابُ الْجَحِيمِ‏}‏ ‏.‏ وَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِي أَبِي طَالِبٍ فَقَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏{‏ إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ‏}‏‏.‏
ஸயீத் இப்னு முஸய்யிப் (ரஹ்) அவர்கள் தனது தந்தை (முஸய்யிப் இப்னு ஹஸ்ம் ரலி) அவர்கள் வாயிலாக அறிவிக்கிறார்கள்:

அபூ தாலிபுக்கு மரண வேளை நெருங்கியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வந்தார்கள். அவரிடம் அபூ ஜஹ்ல் மற்றும் அப்துல்லாஹ் இப்னு அபீ உமைய்யா இப்னுல் முகீரா ஆகியோர் இருப்பதைக் கண்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் பெரிய தந்தையே! 'லாயிலாஹ இல்லல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை) என்று சொல்லுங்கள். இவ்வார்த்தையைக் கொண்டு அல்லாஹ்விடம் உமக்காக நான் சாட்சி சொல்வேன்" என்று கூறினார்கள்.

அப்போது அபூ ஜஹ்லும், அப்துல்லாஹ் இப்னு அபீ உமைய்யாவும், "அபூ தாலிபே! அப்துல் முத்தலிபின் மார்க்கத்தை நீர் புறக்கணிப்பீரா?" என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (கலிமாவை) அவருக்கு எடுத்துக் கூறிக்கொண்டே இருந்தார்கள்; அவ்வார்த்தையை அவருக்குத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இறுதியில் அபூ தாலிப் அவர்களிடம் பேசிய கடைசி வார்த்தை, "அவர் அப்துல் முத்தலிபின் மார்க்கத்திலேயே இருக்கிறார்" என்பதாகும். அவர் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று சொல்ல மறுத்துவிட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக, உமக்காகப் பாவமன்னிப்புத் தேடுவதிலிருந்து நான் தடுக்கப்படாத வரை, உமக்காக நான் பாவமன்னிப்புத் தேடிக்கொண்டே இருப்பேன்" என்று கூறினார்கள்.

அப்போது கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் (பின்வரும் வசனத்தை) அருளினான்:
"இணைவைப்பவர்கள் நரகவாசிகள் என்று தங்களுக்குத் தெளிவான பின்னரும், அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்பு கோருவது நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் தகுதியானதல்ல." (திருக்குர்ஆன் 9:113)

மேலும் அபூ தாலிப் விஷயத்தில் அல்லாஹ் (பின்வரும் வசனத்தை) அருளி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினான்:
"(நபியே!) நிச்சயமாக நீர் விரும்பியவரை உம்மால் நேர்வழியில் செலுத்த முடியாது. மாறாக, அல்லாஹ் தான் நாடியவரை நேர்வழியில் செலுத்துகிறான். மேலும், நேர்வழி பெறுவோர் யார் என்பதை அவனே நன்கு அறிந்தவன்." (திருக்குர்ஆன் 28:56)

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح