பஹ்ஸ் இப்னு ஹகீம் தம் தந்தை வழியாக, தம் பாட்டனார் (ரழி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்:
"நான் (நபி (ஸல்) அவர்களிடம்), 'அல்லாஹ்வின் தூதரே! (என் இரு கைகளின்) விரல்களின் எண்ணிக்கையை விட அதிக முறை, நான் உங்களிடம் வரமாட்டேன்; உங்கள் மார்க்கத்தைப் பின்பற்ற மாட்டேன் என்று சத்தியம் செய்த பின்னரே நான் உங்களிடம் வந்துள்ளேன். நிச்சயமாக நான், கண்ணியமும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வும் அவனது தூதரும் எனக்குக் கற்றுத்தந்ததைத் தவிர வேறு எதையும் விளங்காத ஒரு மனிதனாக இருந்தேன். அல்லாஹ்வின் வஹீ (இறைச்செய்தி)யைக் கொண்டு நான் உங்களிடம் கேட்கிறேன்; உங்கள் இறைவன் எதைக் கொண்டு உங்களை எங்களிடம் அனுப்பியுள்ளான்?' என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'இஸ்லாத்தைக் கொண்டு' என்று பதிலளித்தார்கள்.
'இஸ்லாத்தின் அடையாளங்கள் யாவை?' என்று நான் கேட்டேன்.
அதற்கு அவர்கள், 'நீர், "நான் என் முகத்தை அல்லாஹ்வுக்கு அடிபணியச் செய்துவிட்டேன்; (இணைவைப்பிலிருந்து) விலகிவிட்டேன்" என்று கூறுவதும், தொழுகையை நிலைநாட்டுவதும், ஜகாத்தை வழங்குவதும் ஆகும்' என்று கூறினார்கள்."