இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1321 kஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنَّا نُقَلِّدُ الشَّاءَ فَنُرْسِلُ بِهَا وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَلاَلٌ لَمْ يَحْرُمْ عَلَيْهِ مِنْهُ شَىْءٌ ‏.‏
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

"நாங்கள் ஆடுகளுக்கு (அடையாள) மாலை அணிவித்து அவற்றை அனுப்பி வைப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணியாதவர்களாக (ஹலால் ஆனவர்களாக) இருப்பார்கள். (இஹ்ராம் அணிந்தவருக்குத்) தடுக்கப்பட்ட எதுவும் அவர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கவில்லை."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح