அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் (ரழி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி) அவர்களுடன் இஹ்ராம் நிலையில் இருந்தபோது, அவருக்கு ஒரு (வேட்டையாடப்பட்ட) பறவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தல்ஹா (ரழி) அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். எங்களில் சிலர் அதைச் சாப்பிட்டோம்; சிலர் (அதைச் சாப்பிடுவதிலிருந்து) தவிர்ந்துகொண்டோம். தல்ஹா (ரழி) அவர்கள் விழித்தபோது, அதைச் சாப்பிட்டவர்களைச் சரிகண்டார்கள். மேலும், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இதைச் சாப்பிட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.