இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2883 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، وَابْنُ أَبِي عُمَرَ، - وَاللَّفْظُ لِعَمْرٍو - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ،
عُيَيْنَةَ عَنْ أُمَيَّةَ بْنِ صَفْوَانَ، سَمِعَ جَدَّهُ عَبْدَ اللَّهِ بْنَ صَفْوَانَ، يَقُولُ أَخْبَرَتْنِي حَفْصَةُ، أَنَّهَا سَمِعَتِ
النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ لَيَؤُمَّنَّ هَذَا الْبَيْتَ جَيْشٌ يَغْزُونَهُ حَتَّى إِذَا كَانُوا بِبَيْدَاءَ
مِنَ الأَرْضِ يُخْسَفُ بِأَوْسَطِهِمْ وَيُنَادِي أَوَّلُهُمْ آخِرَهُمْ ثُمَّ يُخْسَفُ بِهِمْ فَلاَ يَبْقَى إِلاَّ الشَّرِيدُ
الَّذِي يُخْبِرُ عَنْهُمْ ‏ ‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ أَشْهَدُ عَلَيْكَ أَنَّكَ لَمْ تَكْذِبْ عَلَى حَفْصَةَ وَأَشْهَدُ عَلَى حَفْصَةَ
أَنَّهَا لَمْ تَكْذِبْ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم
அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் அறிவித்தார்: ஹஃப்ஸா (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறத் தாம் கேட்டதாகத் தெரிவித்தனர்:

“நிச்சயமாக ஒரு படை இந்த ஆலயத்தை (கஅபாவை) நோக்கிப் படையெடுத்து வரும். அவர்கள் ‘பைதா’ (எனும் வெட்டவெளியை) அடைந்ததும், அவர்களில் நடுப்பகுதியினர் பூமிக்குள் விழுங்கப்படுவார்கள். அவர்களின் முன்னணியினர் அவர்களின் பின்னணியினரை அழைப்பார்கள். பின்னர் அவர்களும் பூமிக்குள் விழுங்கப்படுவார்கள். அவர்களைப் பற்றிய செய்தியை அறிவிக்கும் தப்பிப் பிழைத்தவரைத் தவிர அவர்களில் எவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்.”

(இதைக் கேட்ட) ஒருவர், “தாங்கள் ஹஃப்ஸா (ரழி) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன்; மேலும் ஹஃப்ஸா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டவில்லை என்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்” என்று கூறினார்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح