அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் மக்காவிற்கு வருகை தந்தனர். யஸ்ரிப் (மதீனா) நகரின் காய்ச்சல் அவர்களைப் பலவீனப்படுத்தியிருந்தது. அப்போது இணைவைப்பாளர்கள், "காய்ச்சலால் பலவீனமடைந்து, அதனால் பெரிதும் துன்புற்ற ஒரு கூட்டத்தார் நாளை உங்களிடம் வரவுள்ளனர்" என்று கூறினர். அவர்கள் (கஅபாவின்) 'ஹிஜ்ர்' வளைவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.
எனவே, இணைவைப்பாளர்கள் முஸ்லிம்களின் வலிமையைக் காண்பதற்காக, மூன்று சுற்றுகளில் விரைந்து நடக்குமாறும், இரண்டு மூலைகளுக்கு இடைப்பட்ட தூரத்தில் (சாதாரணமாக) நடந்து செல்லுமாறும் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
(இதைக் கண்ட) இணைவைப்பாளர்கள், "காய்ச்சல் இவர்களைப் பலவீனப்படுத்திவிட்டதாகவா நீங்கள் கருதினீர்கள்? இவர்கள் இன்னாரை விடவும், இன்னாரை விடவும் வலிமை மிக்கவர்களாக இருக்கிறார்களே!" என்று (வியப்புடன்) பேசிக்கொண்டனர்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் (தொடர்ந்து) கூறினார்கள்: அவர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்பதைத் தவிர வேறெதுவும், எல்லாச் சுற்றுகளிலும் அவர்களை விரைந்து நடக்குமாறு கட்டளையிடுவதிலிருந்து நபி (ஸல்) அவர்களைத் தடுக்கவில்லை.