இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1611ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَرَبِيٍّ، قَالَ سَأَلَ رَجُلٌ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ اسْتِلاَمِ الْحَجَرِ،‏.‏ فَقَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ‏.‏ قَالَ قُلْتُ أَرَأَيْتَ إِنْ زُحِمْتُ أَرَأَيْتَ إِنْ غُلِبْتُ قَالَ اجْعَلْ أَرَأَيْتَ بِالْيَمَنِ، رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ‏.‏
சுபைர் பின் அரபி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு உமர் (ரழி) அவர்களிடம் ஹஜருல் அஸ்வதைத் தொடுவது குறித்துக் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரழி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடுவதை நான் பார்த்தேன்” என்று கூறினார்கள்.

அம்மனிதர், “(கூட்ட நெரிசலில்) நான் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது? நான் (கூட்டத்தால்) மிகைக்கப்பட்டு விட்டால் என்ன செய்வது? கூறுங்கள்” என்று கேட்டார்.

அதற்கு இப்னு உமர் (ரழி), “உமது ‘என்ன செய்வது’ (எனும் கேள்விகளை) யமனிலேயே வைத்துக்கொள்ளும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தொட்டு முத்தமிடுவதை நான் பார்த்தேன்” என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح