அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: 'அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரின் உவமையாவது – அல்லாஹ்வின் பாதையில் யார் அறப்போர் புரிகிறார் என்பதை அல்லாஹ்வே நன்கறிவான் – நோன்பு நோற்று, (இரவில்) நின்று வணங்குபவரைப் போன்றதாகும். அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவருக்காக அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான்; அதாவது, அவரை மரணிக்கச் செய்தால், அவரைச் சொர்க்கத்தில் சேர்ப்பதாகவும், அல்லது நற்கூலியுடனோ அல்லது போரில் கிடைத்த செல்வத்துடனோ அவரைப் பாதுகாப்பாகத் திரும்பச் செய்வதாகவும் (பொறுப்பேற்றுள்ளான்).'