அப்துல்லாஹ் பின் தஃலபா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: "உஹுதில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அவர்களை அவர்களின் இரத்தத்துடனேயே போர்த்துங்கள். ஏனெனில் அல்லாஹ்வுக்காக ஏற்பட்ட எந்தவொரு காயமும், மறுமை நாளில் இரத்தம் சொட்டிக் கொண்டுதான் வரும். அதன் நிறம் இரத்தத்தின் நிறமாக இருக்கும்; அதன் மணம் கஸ்தூரியின் மணமாக இருக்கும்.'"