இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1913 aஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْرَامَ الدَّارِمِيُّ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ،
حَدَّثَنَا لَيْثٌ، - يَعْنِي ابْنَ سَعْدٍ - عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، عَنْ مَكْحُولٍ، عَنْ شُرَحْبِيلَ بْنِ السَّمِطِ،
عَنْ سَلْمَانَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ ‏ رِبَاطُ يَوْمٍ وَلَيْلَةٍ خَيْرٌ مِنْ
صِيَامِ شَهْرٍ وَقِيَامِهِ وَإِنْ مَاتَ جَرَى عَلَيْهِ عَمَلُهُ الَّذِي كَانَ يَعْمَلُهُ وَأُجْرِيَ عَلَيْهِ رِزْقُهُ وَأَمِنَ
الْفَتَّانَ ‏ ‏ ‏.‏
சல்மான் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன்: "ஓர் இரவும் ஒரு பகலும் (இறைவழியில்) காவல் புரிவது, ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்பதையும், ஒவ்வொரு இரவும் நின்று வணங்குவதையும் விட (நன்மையில்) சிறந்ததாகும். ஒருவர் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மரணித்துவிட்டால், அவர் செய்து கொண்டிருந்த (அந்த நல்ல) செயல் (அவர் உயிருடன் இருப்பது போல்) தொடர்ந்து நடக்கும்; அதற்கான அவருடைய நற்கூலி இடையறாது அவருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும்; மேலும், அவர் கப்ரின் வேதனையிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح